Wednesday, May 27, 2009

தமிழன் என்ன இளிச்சவாயான !!!

ஆஸ்திரியாவில் ஒரு சீக்கிய மதகுரு பாடுகொலைக்கு பஞ்சாப்பில் கலவரம், ஒருவர் கூட கைது இல்லை. ஆனால் ஸ்ரீலங்காவில் தமிழர் பாடுகொலையை கண்டித்து சென்னையில் உண்ணாவிரதம் இருந்தால் கைது.இது என்ன ஜனநாயக நாடு. தமிழன் என்ன இளிச்சவாயான !!!
அல்லது இந்திய பிரதமர் சீக்கியர் என்ற இருமாப்ப.

Friday, May 15, 2009

என்னுடைய பார்வையில் சிறந்த 10 தமிழ் திரைப்படப் பாடல்கள்:

1.விடை கொடு எங்கள் நாடே - கன்னத்தில் முத்தமிட்டால்.
2.வரம் தந்த ஸ்வாமிக்கு லாலி - சிப்பிக்குள் முத்து.
3.இளைய நிலா பொழிகிறதே - பயணங்கள் முடிவதில்லை.
4.காதல் கவிதைகள் படித்திடும் நேரம் - கோபுர வாசலிலே.
5.இது ஒரு பொன்மாலை பொழுது - நிழல்கள்.
6.நான் தேடும் செவ்வந்திப் பூவிது - தர்ம பத்தினி.
7.அந்தி மழை பொழிகிறது - ராஜ பார்வை.
8.இதழ்யில் கதை எழுதும் நேரம் இது - உன்னால் முடியும் தம்பி.
9.அகரம் இப்போ சிகரம் ஆச்சு - சிகரம்.
10.கல்யாண மாலை - புது புது அர்த்தங்கள்.

Friday, May 1, 2009

ஒரு நிமிஷம் நமது இலங்கை தமிழர்களை பற்றி சிந்தியுங்கள்!!!


எங்கள் அன்புக்குரிய தமிழக உறவுகளே, 

மீண்டும் ஒருமுறை இந்திய அரசின் நயவஞ்சகத்துக்கு பலியாகி ஈழ விடுதலைப் போரின் நான்காம் கட்டத்தின் இறுதி வெற்றியை இழந்து பின்னகர்கிறோம். போரில் வெற்றி பெற முடியாத ஸ்ரீலங்கா ராணுவம் தனிமனித விருப்பு வெறுப்புகளுக்கு ஆதரவளிக்கும் இந்திய அரசின் உதவியுடன் எங்கள் வீரர்களை நள்ளிரவில் நஞ்சுப் புகையூட்டிக் கொன்று விட்டனர். மகாபாரதப் போரில் கௌரவர் திரோபதியின் புதல்வர்களை இரவோடிரவாகக் கொன்றது போல. எங்கள் உறவுகளே இப்போது ஐந்தாம் கட்டப் போரின் ஆரம்பத்தை உங்கள் கரங்களில் தந்து காத்து நிற்கிறோம்.

எங்கள் அன்பு உறவுகளே உங்களிடம் இன்று கையேந்தி நிற்கிறோம். நாங்கள் வாழ்வதும் சாவதும் உங்கள் கைகளில். இந்த சமயத்திலாவது ஜாதி, மதம் என்னும் வேறுபாடுகளைக் கடந்து எங்கள் வாழ்வுக்காய் வாக்களியுங்கள்.ஆம்!!!!

இந்திய மத்திய அரசிலிருந்து காங்கிரசையும் அதன் ஆதரவாளர்களையும் தூக்கி எறியுங்கள் .

எங்கள் தமிழகத்து இளைய சமுதாயமே நீங்கள் போடப் போகிற ஒவ்வொரு வாக்கும் ஈழத் தமிழனின் உயிரைக் காக்கும்.