எது எதுவோ அதை எப்போதும் அப்படியே விரும்பி ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் கொண்டிருப்போம்.
------------------------------------------------------------
நான் : சாவில் தமிழ் படித்து சாகவேண்டும் என்
சாம்பல் தமிழ் மணந்து வேகவேண்டும்.
நான் : பாடையிலே படுத்தூரைச் சுற்றும்போதும்
பைந்தமிழில் அழும் ஓசை கேட்கவேண்டும்.
நான் : ஓடையிலே என்சாம்பல் ஓடும்போதும்
ஒண்தமிழே சலசலத்து ஓடவேண்டும்
நான் : ஈடு இயையற்ற மற்றும் விலை மதிக்க முடியாத உயிரை தமிழ் ஈழத்திர்க்காக உயிர் தியாகம் செய்த மாவீரர்களான போராளிகளுக்கு எனது வீரவணக்கத்தை உரியதாக்கி கொள்ளுகிறேன்.
நான் : சிங்கள ராணுவத்தின் கோர பிடியில் சிக்கி தவிக்கும் எமது தமிழ் ஈழத்தின் விடுதலை நாளை எதிர்நோக்கும் பல தமிழர்களின் நானும் ஒருவன்.
நான் : மண்ணுக்காக நாமே சிந்தும் வியர்வைதான் கடவுள்
மனிதனுக்காக மனிதன் சிந்தும் கண்ணீர்தான் கடவுள்
கடவுள் இல்லை என்னும் அறிவுதான் கடவுள்
ஆகமொத்தம் உலகில் அன்புதான் கடவுள்.
நான் : என்னயின்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்கள்
இனமின்ற தமிழ்நாடு தனக்கும் என்னால்
தினையளவு நலம் ஏதும் கிடைக்கும் என்றால்
செத்தொழியும் நான் எனக்கு திருநாள் ஆகும்.
நான் : திங்களோடும் செழ்ம்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுககளோடும் மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழ் உடன் பிறந்ததோம் நாங்கள்.
நான் : மங்கையர் தரும் சுகம் நம்
தமிழுக்கு ஈடு இல்லை.
நான் : சிங்கமேன்ற இலங்களைகளே மிகத்
திவிரம் கொள்ளுவீர் நாட்டினிலே
பங்கம் விளைந்திடில் தாய் மொழிக்கு உடல்
பச்சை ரத்தம் பரிமாரிடுவோம்.
நான் : நாம் பிறந்த சமுதாயம் எவ்வாறாக இருந்தாலும்
நாம் விட்டு போகும்போது அவை சிறந்த சமுதாயமாக இருக்க வேண்டும்
நான் : உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்தைக் கண்டு உங்கள் மனம் கொதித்தால் நாம் இருவரும் நண்பர்களே.
நான் : தூங்கும் புலியை பறை கொண்டெழுப்பினோம்;
தூய தமிழரை தமிழ் கொண்டெழுப்பினோம்!"
நான் : கொலை வாளினை எடடா
மிக கொடியோர் செயல் அறவே
குகைவாழ் ஒரு புலியே உயர்
குணமேவிய தமிழா.
நான் : போற்றுபவர் போற்றட்டும் புழுதிவாரித் தூற்றுபவர் தூற்றட்டும்
தொடர்த்ந்து செல்வேன் !
ஏற்றதொரு கருத்தைஎன துள்ளம் ஏற்றால் எடுத்துரைப்பேன் எவர்வரினும் நில்லேன் அஞ்சேன்!.
நான் : நாம் எந்த ஆயுததை எடுப்பது என்பதை நமது எதிரிகள் தீர்மானிக்கிறார்கள்.
நான் : யாதும் ஊரே யாவரும் கேளிர்.
நான் : தமிழர் என்று சொல்வோம் பகைவரை
தமை நடுங்க வைப்போம்.
நான் : எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!
நான் : பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தல்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு.
நான் : வேங்குருதி தனிற் கமழ்ந்து வீரம்செய்கின்ற
தமிழ் எங்கள் முச்சாம்.
நான் : சாதி ஒழ்த்திடல் நன்று நல்ல
தமிழ் வளர்த்தல் மற்றொண்டு.
நான் : மாதொருத்தி வேண்டும் எனக்கு தமிழ்
மகளாயிருந்தால் தான் இனிக்கும்.
நான் : தமிழுக்கு அமுதொன்று பேர் அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்.
நான் : எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓரினம்
எல்லோரும் ஓர் விலை எல்லோரும் ஓர் நிறை.
நான் : உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு
இதை உரக்க சொல்வோம் உலகத்திருக்கு
நான் : விழவிழ எழுவோம் விழுந்திவிடமாடோம்
விடுதலை பாதை விட்டு விலகிவிடமாடோம்.
நான் : பிறந்த குழந்தை நடந்து பழக
கையில் வேல்லை கொடுப்போம்
பிறந்த குழந்தை இறந்து பிறந்தால்
வாளால் கிறிப் புதைப்போம்.
நான் : எங்கள் மண்ணை தொட்டவன் கால்கள்
எங்கள் நிலத்தில் உரமாகும்
எங்கள் பெண்ணை தொட்டவன் கைகள்
எங்கள் வீட்டில் அடுப்பில் விறககும்.
நான் : சுற்றும் வரை பூமி
சுடும் வரை நெருப்பு
சுவாசம் உள்ள வரை தமிழ்.
நான் : உள்ள குறைகள் நான் தீர்ப்பேன் - தமிழ்
உலகை மிட்டுக் காப்பேன்.
தெள்று தமிழர் எங்கிருந்தாலும் - அவர்க்குத்
தீமை செய்வாரை ஒரு கை பார்ப்பேன்.
நான் : சித்திரச் சோலைகளே - உமை நன்கு
திருத்த இப்பரினிலே - முன்னர்
எத்தனை தோழர்கள் ரத்தம் செரிந்தன
ரோ! உங்கள் வேரினிலே
நான் : ஒடப்ப ராயிருக்கும் ஏழையப்பர்
உதைய்ப்ப ராகிவிட்டல் , ஓர் நொடிக்குள்
ஓடப்பர் உதைய்ப்பர் எல்லாம் மாறி
ஒப்பப்பர் அய்விடுவார் உணர்ப்பா நீ.
இங்குள்ள கவிதைகள் பல எனது சொந்தப் படைப்பில்லை...எனது கருத்துகளை ஒத்தப் படைப்புகளை இங்கே பதிவுச் செய்துள்ளேன்...
No comments:
Post a Comment