Sunday, June 28, 2009

கண்ணிர் தேசம் புத்தகத்திலிருந்து.

தலைப்பு : போர்க்காலப் பூக்கள்.

தோட்டங்கள் மத்தியில்
இவர்கள் பூக்கள்
குறிஞ்சிப் பூ போன்றவர்கள்
அரிதாக பூப்பார்கள்

அன்று,
அண்ணன் திலீபன்
காந்தியன் அகிம்சையை
இந்தியாவிற்கு
சொல்லி கொடுத்தான்....

இன்று,
அண்ணன் "புன்னகை செல்வன்"
போரின் மறுபக்கத்தை
உலகத்திற்கு
எடுத்து சொன்னான்....
சமாதான புறாகளையும்
இரையாக்குகிறார்கள்.

--------------------------------------------------------------------------------------

தலைப்பு : உலகமயமாக்கலோ?

அப்பா கனடாவில்
அம்மாவும் தங்கையும்
இந்தயாவில்
அக்கா இலண்டனில்
அண்ணாவோ நோர்வயில்
தம்பி பிரான்சில்
தாதாவும் பாட்டியும்
இன்னும் இலங்கையில்

உறவுகள் பிரிந்து
உணர்வுகள் இறந்து
தூக்கி எறியப்பட்டோம்

நலவீசாரிப்புக்கள்
நடக்கின்றன
அலைவரிசையில்

உணர்வுப் பரிமாற்றம்
தொலைபேசியில்

இதுதான்உலகமயமாக்கலோ?

No comments:

Post a Comment